இன்னொரு ராமதாஸ், இன்னொரு வன்னியர் கட்சி
சென்னை :
மறைந்த வன்னியர் சமுதாயத் தலைவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராமசாமி படையாச்சியின் மகன் டாக்டர்எஸ்.எஸ்.ஆர். ராமதாஸ், புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளார்.
ராமசாமி படையாச்சியார் சமுதாய முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வன்னியர் சமுதாயத்தலைவர்களில் மிக முக்கியமானவர் ராமசாமி படையாச்சி. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர்.அவரது மகன் டாக்டர் எஸ்.எஸ்.ஆர். ராமதாஸ் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏவாக இருந்தவர்.
இந் நிலையில் தனது தந்தை பெயரில் கட்சி தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
வன்னியர் சமுதாயத்தை ஒரு முரட்டு சமுதாயம் என்ற பெயரை ஏற்படுத்தி, சமுதாயத்தின் பெயரையே சிலர் (பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ்) கெடுத்து விட்டனர்.
வன்னியர் சமுதாயத்தை பின்னோக்கித் தள்ளுகின்ற போராட்டங்களை அறிவித்து, அப்பாவிகளை போலீஸ் நிலையத்திற்குஅலைய விட்டும், 25 அப்பாவிகளை துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கியும் இந்த சமுதாயத்திற்கு கெட்ட பெயரைஏற்படுத்தினர்.
முரட்டு சமுதாயம் என்ற கெட்ட பெயரைப் பெற்று விட்ட வன்னியர் சமுதாயத்திற்கு, ஜனநாயக முறையில் எம்.பி.,எம்.எல்.ஏக்களைப் பெற்றுத் தரும் நோக்கிலேயே இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார் ராமதாஸ்.
இவர் கட்சி ஆரம்பித்திருப்பதன் பின்னணியில் அதிமுக இருப்பதாகக் கருதப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின்போதுபாமகவுக்கு எதிராக பல வன்னியக் கட்சிகள் உருவாகி தேர்தலில் மண்ணைக் கவ்வியது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் படையாட்சி பெயரில் இந்தக் கட்சி அதிமுக பின்னணியில் உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவேகாங்கிரஸ் கட்சியில் உள்ள திண்டிவனம் ராமமூர்த்தி தலையிைல் அக் கட்சியை உடைக்கும் வேலையையும் ஆளும் தரப்பு செய்துவருகிறது. அவரும் வன்னியர்களுக்காக என்ற கோஷத்துடன் தனி கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
வன்னிய சமுதாயத்தின் முக்கியத் தலைவர்களைக் கொண்டு கட்சியை ஆரம்பித்தால், இருக்கும் கட்சிகளை உடைத்தால் அதுபாமகவை வலுவிழக்கச் செய்யும் என அதிமுக கருதுகிறது. மேலும் காங்கிரசிலும் சலசலப்பை உருவாக்கும்.
இதன்மூலம் திமுக கூட்டணியை ஆட்டிவிடலாம் என அதிமுக கருதுகிறது.