பாப்பாரபட்டி, கீரிப்பட்டி தனி அலுவலர்கள் பதவி நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாப்பாரபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட நான்கு தலித் பஞ்சாயத்துக்களின் தனி அலுவலர்களின் பதவிக் காலம்நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் பாப்பாரபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கோட்டக்கச்சியேந்தல் ஆகிய நான்கு தலித் பஞ்சாயத்துகளில் நீண்டகாலமாக தேர்தல் நடத்த முடியவில்லை. குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் தொடர்ந்து தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்துவருவதால் முறையாக தேர்தல் நடத்தப்பட முடியவில்லை.
அப்படியே தேர்தல் நடத்தி யாராவது தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட பதவியயேற்ற அடுத்த நிமிடமே அவர்கள் ராஜினாமாசெய்து விடுகிறார்கள். இந்த நிலையில் தற்போது உள்ள நான்கு தனி அலுவலர்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது.
இதைத் தொடர்ந்து அவர்களது பதவிக்காலத்தை நீட்டித்து சட்டசபையில் திங்கள்கிழமை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications