ஆளுனரின் தேநீர் விருந்து:ஜெ புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுனர் எஸ்.எஸ்.பர்னாலா அளித்த தேநீர் விருந்தை முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார்.அமைச்சர்களும் இதில் பங்கேற்கவில்லை.

குடியரசு தினத்தையொட்டி நேற்றிரவு தேநீர் விருந்து அளித்தார் பர்னாலா. இந்த நிகழ்ச்சியில் முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பதுமரபாக இருந்து வருகிறது.

ஆனால், இதை ஜெயலலிதா புறக்கணித்துவிட்டார். இதில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, தமிழக அரசின் தலைமைச்செயலாளர் நாராயணன், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, டிஜிபி அலெக்சாண்டர், தேர்தல் ஆணையர்பழனிச்சாமி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன்உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அரசியல் கட்சிகள் சார்பில் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், அதிமுக சார்பில் எம்.எல்.ஏ. தமிழ்மொழிராஜதத்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில்ஆளுனர் விருந்தில் முதன் முறையாக பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+