For Daily Alerts
Just In
சேலம், திண்டுக்கல்லுக்கு வருகை தரும் பிரதமர்
சேலம்:
சேலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் செங்கப்பள்ளி வரை புதிதாக அமைக்கப்படவுள்ள 4 வழிச் சாலைக்கு அடிக்கல் நாட்டபிரதமர் மன்மோகன் சிங் பிப்ரவரி 4ம் தேதி சேலம் வருகிறார்.
இதுதொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,சேலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் செங்கப்பள்ளி வரை ரூ. 1,100 கோடி மதிப்பில் புதிய நான்கு வழிச் சாலைஅமைக்கப்படவுள்ளது. 100 கிலோமீட்டருக்கு இந்த நான்கு வழிச் சாலை அமையும். சேலம் அரசுக் கலைக் கல்லூரியில் பிப்ரவரி 4ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். திமுக தலைவர் கருணாநிதியும் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்.
இதேபோல திண்டுக்கல்லிலும் வரும் 7ம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச் சாலை அமைக்கும் திட்டம் அடிக்கல்நாட்டப்படுகிறது. இதிலும் பிரதமர் பங்கேற்கிறார் என்றார் பாலு.
Story first published: Friday, January 27, 2006, 5:30 [IST]