திருச்சி சிறையில் அல் உம்மா கைதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட அல் உம்மா கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஇன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.திருச்சி மத்திய சிறையில் 40க்கும் மேற்பட்ட அல் உம்மா இயக்கத்தினர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதுசென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் இன்று காலை அல் உம்மா கைதிகள் திடீரென உண்ணாவிரதத்தில் குதித்தனர். தங்கள் மீதான வழக்குகளைவிரைவில் முடிக்க வேண்டும், குடும்பத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பரோலில் விடுவிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கைள் நிறை வேறாவிட்டால் தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications