For Quick Alerts
For Daily Alerts
Just In
கணவருக்கு கள்ளத் தொடர்பு: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
சென்னை:
கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்ததால் மனம் உடைந்த பெண் தனது 2 குழந்தைகளுடன்தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.சென்னை அருகே உள்ள பாடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பானுமதி. காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
செல்வராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்துபானுமதிக்குத் தெரிய வந்துள்ளது.
கணவரின் கள்ளத் தொடர்பால் மனம் உடைந்த பானுமதி, கணவர் வெளியே சென்ற நேரமாக பார்த்து தனது இரு மகன்களுடன்தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
Comments
Story first published: Tuesday, January 31, 2006, 5:30 [IST]