தொகுதிப் பங்கீடு: மார்க்சிஸ்ட் அதிருப்தி
மதுரை:
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்கள் சீராகவும், சிறப்பாகவும் இல்லை என்று தமிழக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணியில் ரகசியமான முறையில் கூட்டணிக் கட்சிகளுடன்திமுக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. ஆளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து ஒரு அவுட்லைன் போட்டுக்கொடுத்து விட்டதாகவும் தெரிகிறது.இதுதொடர்பாக தொடர்ந்து பேசி இறுதி வடிவம் கொடுக்க திமுக தலைமை முயன்று வருகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பாகமதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே அதிருப்தி நிலவுவதாக தெரிகிறது. இந்தக் கட்சிகள் கேட்கும்தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வருமா என்ற கேள்விக்குறியே இதற்குக் காரணம்.
கவுரவமான வகையில் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பாமக, மதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள்மறைமுகமாகவும்,நேரடியாகவும் கூறி வருகின்றன. இந்த நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்கள் சீராகவும்,சிறப்பாகவும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்கள் சீராகவும், சிறப்பாகவும் இல்லை.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்கள் என்று செய்திகள் வருகின்றன. இது நன்றாகவா உள்ளது? தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்களின் உணர்வுகள் புண்படாதா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை விட கூடுதலான தொகுதிகளை எதிர்பார்க்கிறது. எத்தனை தொகுதிகளை கேட்பது என்பதுஉள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து வருகிற 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதித்துமுடிவெடுக்கவுள்ளோம் என்று கூறினார்.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பகிரங்கமாக அதிருப்தி வெளியிட்டுள்ள முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்வரதராஜன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications