டி.விகளால் கலாச்சாரம் சீரழிகிறது: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிப்பதாக அமைந்துள்ளது. எனவேடிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை தவிருங்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த பள்ளித் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில், நான் எட்டுவயதிலேயே மேடைப் பேச்சில் இறங்கி விட்டேன். அந்த ஆற்றலையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் எனக்குள்ஊட்டியது எனது ஆசிரியர்கள் தான். ஆசிரியர்களை நாம் பெற்றோர் போல மதிக்க வேண்டும்.

அம்மா, அப்பாவுக்கு கீழ்படிவதைப் போல, மதிப்பதைப் போல ஆசிரியர்களையும் மதித்து நடக்க வேண்டும்.

மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களை போதிப்பவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். பள்ளிக் கூடங்களில் சாதி, மதஉணர்வுகள் அறவே கூடாது.

சில மாணவர்கள் தேர்தவில் சைபர் மதிப்பெண் எடுத்து விட்டால் பெற்றோர் திட்டுவார்கள், கோபித்துக் கொள்வார்கள், அடிக்கக்கூடச் செய்வார்கள். சைபர் இல்லாவிட்டால் கணக்கு ஏது? சைபர் தான் கணக்குப் பாடத்திற்கு அடித்தளம்.

எனவே பிள்ளைகள் மதிப்பெண் சரியாக எடுக்காவிட்டால் திட்டாதீர்கள், அடிக்காதீர்கள். மாறாக அவர்களைஊக்கப்படுத்துங்கள், அடுத்தமுறை நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுக்க ஆதரவாக இருங்கள்.

மாணவர்கள் டிவி அதிகம் பார்க்கிறார்கள் என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டு. டிவி பார்ப்பதில் தவறில்லை. ஆனால்அதிலேயே மூழ்கிப் போய் விடாதீர்கள். இன்று வரும் டிவி நிகழ்ச்சிகள் நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிப்பதாகஅமைந்துள்ளன.

எனவே அது மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் நல்ல நிகழ்ச்சிகளாக தேர்வு செய்து பாருங்கள்.

உங்களில் ஒரு அன்னை தெரசா இருக்கலாம், நல்ல விஞ்ஞானி இருக்கலாம், படைத்தளபதிகள் இருக்கலாம், மனித நேயம் மிக்கதலைவர்கள் இருக்கலாம். அவற்றை உணர்ந்து நீங்கள் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று கூறினார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+