தொகுதிகள்: காங். கவுரவம் காக்கப்படும்: வாசன்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
சட்டசபைத் தேர்தல் தொகுதிகள் ஒதுக்கீட்டில் காங்கிரஸ் கட்சியின் கவுரவத்தை காக்கும் வகையில் ஒதுக்கீடு இருக்கும் எனமத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வேலூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும்முறைப்படி பேச்சுவார்த்தை நடக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்பே அது குறித்த பேச்சுக்கள் தொடங்கும்.காங்கிரஸ் கட்சிக்கென்று தனி பாரம்பரியம், கவுரவம் உள்ளது. இந்த பாரம்பரியம், கவுரவம் கெடாத வகையில் காங்கிரஸுக்குதொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என நம்புகிறேன்.
காமராஜர் ஆட்சி என்பது நமது லட்சியம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. காலம் கனியும், காமராஜர் ஆட்சி மலரும்.அதுவரை பொறுத்திருப்போம்.
பாலாறு பிரச்சினை தொடர்பாக ஆந்திர முதல்வரிடம் நேரில் மனு கொடுத்துள்ளேன். அவரும் பரிசீலனை செய்வதாககூறியுள்ளார். அதே போல சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கும் மனு கொடுத்துள்ளேன் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications