ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்கு
சென்னை:
சென்னை கமிஷர் அலுவலகம் முன்பு தடையை மீறி மறியல் செய்த மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.சென்னை எம்ஜிஆர் நகரில் 42 பேர் நெரிசலில் சிக்கி பலியானதற்கு தமிழக அரசே பொறுப்பு என்று உச்சநீதிமன்றம்தீர்ப்பளித்ததை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் பதவி விலகவேண்டும் என கோரி திமுகவினர் கமிஷனர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்தும் திமுக துணை பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் ஆற்காடுவீராசாமி தலையில் ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஸ்டாலின் உள்படஆயிரக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் உள்பட 1634 திமுகவினர் மீது எழும்பூர் போலீசார் பிரிவு143 (தடையை மீறி ஆர்பாட்டம் செய்ய முயற்சி), பிரிவு 188 (அனுமதி பெறாமல் திரண்டு கோஷம் எழுப்புதல்), பிரிவு 151(முன்னெச்சரிக்கை நடவடிக்கை) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications