கூட்டணியை உடைக்க போலீஸ் சதி::: கருணாநிதி
சென்னை:
திமுக கூட்டணியை குலைத்திட விரும்பும் காவல் துறை அதிகாரிகளின் சதித் திட்டத்திற்கு எதிராக கூட்டணிக் கட்சிகளின்தலைவர்கள் எனக்குத் துணை நிற்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்காகவும் வாக்காளர்களை வலையில் தள்ளுவதற்காகவும் அதிமுக ஆட்சி அதிகாரத்தைப்பெருமளவு பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதில் காட்டும் அக்கறையை விடப் பன்மடங்கு அதிகமாக எதிர்க்கட்சிகளின்கூட்டணியைப் பிளவுபடுத்திட முயற்சிகளை மேற்கொள்வதில் தான் முனைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் உளவுத் துறை அதிகாரிகளும், காவல் துறையில்
இப்படித் தான் வாழ வேண்டும் என்றில்லாமல் எப்படியும் வாழலாம் எனும் மானமற்ற தத்துவத்தை வாழ்க்கை இலக்கணமாகவகுத்துக் கொண்டவர்கள், அதனை அரசியலுக்கும் பொருத்திடத் துணிந்து விட்டார்களோ என எண்ணித்தான் ஏக்கமுறவேண்டியிருக்கிறது.
ஏழெட்டு கட்சிகளின் பிரச்னைகளுக்கும் மொத்தமாகச் சுமூகத் தீர்வு காண்கிற பெருஞ்சுமை உண்டு என்பதை ஒருக்காலும் நாம்மறந்துவிடப் போவதில்லை. இதற்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், அமைப்புகளும் துணை நிற்க வேண்டும்.
நான் எந்த நிலையிலும் பொறுப்பினைத் தட்டிக் கழிக்க மாட்டேன். அதற்குத் தோழமைக் கட்சிகளின் ஒத்துழைப்பு வழங்குமாறுகேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.