தர்மபுரி: பூடான் மாணவர் மர்ம சாவு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் பூடானை சேர்ந்த மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி என்ற இடத்தில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் படித்து வந்தவர்பூடானை சேர்ந்த சந்தோஷ்குமார்.இவர் தங்கியிருந்த கல்லூரி விடுதி அறையில் மேலும் 2 பேரும் தங்கியுள்ளனர். இந்த நிலையில் மாணவர் சந்தோஷ்குமார், இன்றுகாலை மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சந்தோஷ்குமாரின் உடல்பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து அவருடன் தங்கியிருந்த சக மாணவர்களிடம் போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications