சாலை விபத்தில் நெல்லை பெண் மேயர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ஜெயராணி சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார்.மேயர் ஜெயராணி மற்றும் அவரது குடும்பத்தினர் கார் ஒன்றில், தண்டையார்குளம் என்ற இடத்தில் நடந்த கோவில்கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தனர். நான்குநேரி அருகே அவர்களது கார் சென்றபோதுசாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரி மீது மோதியது.
இதில், காரில் இருந்த ஜெயராணி, அவரது மாமனார் தேவதாஸ், மாமியார் குஞ்சம்மாள், காமாட்சி, அவரது குழந்தைகள் தினேஷ்பாலையா, விவேக் பாலையா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அனைவரையும் போலீஸார் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications