சென்னை டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் பயங்கர தீ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கெல்லீசில் உள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்சில பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அப் பகுதியில் சுமார் 15,000தொலைபேசிகள் இயங்கவில்லை.
இன்று அதிகாலை 2.30 மணிக்கு இந்தக் கட்டடத்தின் 3வது மாடியில் தீப் பிடித்தது. இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குதகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர்.அதற்குள் அந்த மின்னணு இணைப்பகத்தின் கருவிகள் அனைத்தும் எரிந்து சாம்லாகிவிட்டன. அங்கு எழுந்த கரும் புகையில்சிக்கி டெலிபோன் இணைப்பக ஊழியர்கள் 3 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த இணைப்பகத்தில் இருந்து தான் புரசைவாக்கம், கெல்லீ,ஸ், வேப்பேரி, மாதவரம், சூளை, செங்குன்றம் உள்ளிட்டபகுதிகளுக்கு பிஎஸ்என்எஸ் தொலைபேசி இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இந்த விபத்தால் சுமார் 15,000 தொலைபேசிஇணைப்புகள் செயல்படவில்லை.
தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள சாதனங்கள் எரிந்துவிட்டன.












Click it and Unblock the Notifications