ஜெ. நம்பும் ஒரே ஆயுதம் பணம் தான்-ராமதாஸ்
விழுப்புரம்:
தேர்தல் அதிகாரி ராவ் போன்றவர்கள் சும்மா தேர்தல் நேரத்தில் பரபரப்பு ஏற்படுத்துவோடு நின்றுவிடாமல்,உண்மையிலேயே தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பரபரப்பாக இருக்க வேண்டும் என பாமகநிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில்,கடந்த மக்களவைத் தேர்தலின்போது ராவ் பரபரப்பாகப் பேசப்பட்டார். ஆனால், தவறு செய்த அதிமுகவினர், அரசுஇயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திய ஆளும் கட்சியினர் மீது அதன் பிறகு எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.
வரவர ஓட்டுக்கு பணம் வாங்குவது அதிகரித்து வருகிறது. இடைத் தேர்தல்களில் இதைப் பார்த்தோம். இந்தத்தேர்தலிலும் ஜெயிக்க ஜெயலலிதா நம்பியிருக்கும் ஒரே ஆயுதம் பணம் தான்.
தொகுதிக்கு ரூ. 2 கோடி வரை செலவழித்து ஓட்டுக்களை வாங்கத் திட்டமிட்டுள்ளார். இந்தத் தொகை மேலும் கூடஉயரலாம். இதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். ராவ் போன்றவர்கள் செயலாற்றுவதிலும் பரபரப்பைக்காட்ட வேண்டும்.
தேர்தல் ஏற்பாடுகள் துவங்கிவிட்ட நிலையில் ஜெயலலிதா இன்னும் கூட அறிவிப்புக்களை வெளியிட்டு மக்களைஏமாற்றி வருவது கூட ஒருவகையான ஊழல் தான் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications