காதி ஊழியர்களுக்கு மீண்டும் வேலை: நீதிமன்றம்
சென்னை:
பணிநீக்கம் செய்யப்பட்ட கதர், கிராம வாரிய தொழிலாளர்களுக்கு மாற்று வேலை தருமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு கதர் கிராம வாரியத்தைச் சேர்ந்த 862 நிரந்தரப் பணியாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.நிதி நிலை சரியில்லை என்ற காரணத்தைக் கூறி அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி தினகரன், நீதிபதி ஜனார்த்தன ராஜா ஆகியோர்,
சாலைப் பணியாளர்கள் முன்பு நிதி நிலை சரியில்லை என்று கூறி வேலைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் நிதி நிலை சரியானவுடன் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டனர்.
அதேபோல, கதர் கிராம வாரியத் தொழிலாளர்களையும், அதே துறையிலோ அல்லது வேறு துறைகளிலோ பணியமர்த்தலாம். அவர்களுக்கு அதே வேலையைக் கொடுக்க முடியாவிட்டால் மாற்றுப் பணி கொடுத்து அமர்த்தலாம்.
இதுகுறித்து அரசு யோசனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் இதுதொடர்பாக விரிவான அறிக்கையை மார்ச் 2ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை அன்றைக்கே ஒத்திவைத்தனர்.