ரூட்ட மாத்து-நாஞ்சிலிடம் சிக்கிய விஜய்காந்த்
நாகப்பட்டனம்:
திமுகவை மிகக் கடுமையாக சாடிப் பேசி வந்த மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது டாப்பிக்கை மாற்றிக் கொண்டு இப்போது விஜயகாந்த்தை வார ஆரம்பித்துள்ளார்.
மதிமுகவுக்கு கெளவரமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும், கடந்த மறை போல எங்களை ஏமாற்ற முயன்றால் நடப்பதே வேறு, ஏமாந்து போய் தனித்துப் போட்டியிடுவோம் என நினைக்க வேண்டாம், அதிமுக அணிக்குப் போய் விடுவோம், எங்களுடன் காளிமுத்து பேசி வருகிறார், ஏமாற்றுவதே கருணாநிதிக்கு பொழப்பு என்ற ரீதியில் திகவை கடுமையாக சாடி வந்தார் நாஞ்சில் சம்பத்.இவரை அடக்க முயன்று தோற்றுப் போன வைகோ, அவருடன் பேசுவைதேய நிறுத்திவிட்டார். போனில் கூட வைகோவுடன் பேச முடியாமல் திணறிப் போன நாஞ்சில் மனம் வெதும்பிப் போய் கடந்த 3 நாட்களாக அண்டர்கிரவுண்டுக்குப் போனார்
இந் நிலையில் திமுக, மதிமுக இடையே இருந்து வந்த பூசலுக்கு முற்றுப் புள்ளி வைத்த வைகோ நாஞ்சிலின் பேச்சுக்கும், எல்.கணேசனின் பேச்சுக்கும் வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை விட்டார்.
மேலும், நாஞ்சில் சம்பத் திமுக குறித்துப் பேசியது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்றும் வைகோ கூறியுள்ளார்.
இந் நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் நடந்த மதிமுக கூட்டத்தில் திமுகவை விட்டு விட்டு விஜயகாந்த்தைப் பிடித்துக் கொண்டு, அவரை மிகக் கடுமையாக சாடிப் பேசினார் நாஞ்சில் சம்பத்.
சம்பத் பேசுகையில், நேற்று வரை சினிமாவில் நடித்தவர்கள், சினிமா எடுத்தவர்கள், இன்று அரசியல் கட்சித் தலைவராக உலா வருகிறார்கள்.
தொடங்கி விட்ட கட்சியை எப்படி முடிப்பது என்பது தெரியாமல் தவிக்கிறார்கள்.
ரேஷன் அரிசி வீடு தேடி வருமாம். ரேஷன் அரிசியை வாங்கினால் வீட்டுக்குத்தான் கொண்டு வர முடியும், பின்னர் சுடுகாட்டுக்கா போகும்?
இதைக் கேட்டால் எம்.ஜி.ஆர், நான் கருப்பு எம்.ஜி.ஆர். என்று கதை விடுகிறார். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியுமா என்ன என்றார் சம்பத்.
தனது பேச்சின் பெரும்பகுதியில் விஜயகாந்த்தை விமர்சித்த சம்பத், திமுக கூட்டணி குறித்தும் மறைமுகமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications