இந்து நலனை காப்பவருக்கே ஆதரவு: விஎச்பி
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இந்துக்களின் நலனை பாதுகாக்க முன்வரும் கட்சிக்கே வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்போம் எனவிஷ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது.
அக் கட்சியின் துணைத் தலைவரான வேதாந்தம் கூறுகையில்,கோயில்களில் வரும் உபரி வருவாய் வங்கிகளில் முதலீடு செய்யப்படுகிறது. இவை தாழ்த்தப்பட்டசமுதாயத்தினரின் நலனிற்கு பயன்படுத்தப்பட வேண்டும். இதனால் அவர்கள் மதம் மாறுவதைத் தடுக்க முடியும்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது பூசாாரிகள் நல வாரியத்தை அமைத்தார். அதை ஜெயலலிதா அரசு அதைநடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
அதே போல ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும். இந்துநலனை பாதுகாக்கும் கட்சிக்கே சட்டசபை தேர்தலில் எங்கள் ஆதரவு என்றார் வேதாந்தம்.












Click it and Unblock the Notifications