கருணாநிதி ஆஹா..ஓஹோ: ஜெ சீ..சீ..
சென்னை:
மத்திய பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட் என முதல்வர் ஜெயலலிதாவும், வளர்ச்சிக்கு வழி வகுக்கும் எனதிமுக தலைவர் கருணாநிதியும் கருத்து தெரிவித்துள்ளனர்.
2006-07ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில்செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். தமிழகம், மேற்கு வங்கம் உள்பட உள்பட 5 மாநிலங்களில் தேர்தல்நடக்கவுள்ளதால், திமுக, இடதுசாரிகளை எரிச்சல்படுத்தாத வகையில், வரியில்லாத பட்ஜெட்டே தாக்கலாகும்என்று கருதப்பட்டது.அதைப் போலவே புதிய வரிகள் ஏதும் விதிக்க்படவில்லை.
பட்ஜெட் குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை: முற்றிலும் ஒளி இல்லாத ஒருபட்ஜெட்டைஎந்தவித நோக்கமும் இல்லாத பட்ஜெட்டை, இதற்கு முந்தைய பட்ஜெட்டுகளில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளசொற்றொடர்களை மீண்டும் கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் சிதம்பரம்.
ஆக்கப்பூர்வமான எந்த புதிய கருத்தையும் இந்த பட்ஜெட்டில் காண முடியவில்லை. எந்தவித கண்ணோட்டம்இல்லாத மிக சின்னஞ்சிறு விவரங்களை ஆங்காங்கே போட்டு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில்கூறப்பட்ட வாக்குறுதிகளைப் போல் அறிவித்துள்ளார்.
பொது வினியோக முறையில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணை, உணவு தானியங்களின் தொகையை இந்தபட்ஜெட் எடுத்துக் காட்டுகிறது. சாதாரண மக்களின் மீது முழுமையாக சுமைகளை ஏற்றும் பட்ஜெட்டாகும்.
சேவை வரி உயர்வால் விலைவாசி உயரும். பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவர். இது நிச்சயமாக மக்கள்விரோத பட்ஜெட்தான் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
கருணாநிதி பாாராட்டு:
நாட்டின் வளர்ச்சி விகிதத்தை விரைவுபடுத்தும் பட்ஜெட் இது என திமுக தலைவர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்படுகிறது, வரவேற்கப்படுகிறது.வேளாண்மை வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும், கிராமப்புற மேம்பாட்டிற்கும் தேவையான அதிகமுக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக ரூ. 1 லட்சத்து 41,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடுகடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
முதியோர் உதவித் தொகை உயர்வு, பெண் கல்வியை ஊக்குவிக்க 8வது வகுப்புப் படிக்கும் பெண்களுக்கு ரூ.3,000 நிதியுதவி, 6 லட்சம் ஹெக்டேர் நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற ரூ. 944 கோடி ஒதுக்கீடு, மகளிர்சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க ரூ. 4,863 கோடி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் விவசாயிகள் மற்றும்பெண்களின் வரவேற்பைப் பெறும்.
வரியே இல்லாத, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை விரைவுபடுத்தக் கூடிய பட்ஜெட்டை ப.சிதம்பரம் தாக்கல்செய்துள்ளது பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார் கருணாநிதி.