போலி எப்ஐஆர்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
சென்னை:
போலி எப்.ஐ.ஆர். மூலம் கோடிக்கணக்கான இன்சூரன்ஸ் பணத்தை போலீசார் மோசடிசெய்து தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடிஉத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல் நிலையங்களில் போலி எப்.ஐ.ஆர். புழக்கம் குறித்த தகவல்கள்சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.போலி எப்.ஐ.ஆர். சான்றுகளை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் தாக்கல் செய்து அதன்மூலம் கோடிக்கணக்கான பணத்தை பலருடன் சேர்ந்து போலீசார் மோசடி செய்ததும்அம்பலமாகின.
மேலும் போலி எப்ஐஆரைக் காட்டி போலீசாரும், போக்குவரத்துக் போலீசாரும்பொது மக்களை மிரட்டி பணம் வசூலித்ததும் தெரியவந்தது.
இதற்காக தனியார் அச்சகங்களில் போலீசாரே போலி எப்ஐஆர்களை அச்சடித்துவாங்கி இந்த மோசடிகளைச் செய்தனர். இது தொடர்பான செய்திகள்வெளியானபோதும் உடனடியாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதை மூடி மறைக்கவே தமிழக அரசு முயன்றது.
இந் நிலையில் போலி எப்ஐஆர்களால் கோடிக்கணத்தில் பணத்தை இழந்தை நேஷனல்இன்சூரன்ஸ் உள்ளிட்ட சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தன.
இந்த விவகாரத்தி தமிழக போலீசாரே சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்கள் ஒழுங்காகவிசாரணை நடத்த மாட்டார்கள், அப்படியே விசாரித்தாலும் முழு உண்மை வெளியேவராது என்பதால், இந்த விகாரத்தை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுஉயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர்.
அதில், இந்த சம்பவத்தில் தமிழக போலீஸார் மற்றும் பல்வேறு மருத்துவநிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே இந்த வழக்கைதமிழக காவல்துறை விசாரிப்பதை விட சிபிஐ விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும்.எனவே இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது.
சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். நிான்கு மாதங்களில் இடைக்காலஅறிக்கையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அப்பாவிபொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான பணம் முறைகேடுசெய்யப்பட்டுள்ளது வருத்தம் தருகிறது என்று கூறிய நீதிபதிகள்,
விசாரணையை ஜூலை 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications