முல்லை பெரியாறு-ஆழ்ந்த அமைதியில் ஜெ - ஏன்?
சென்னை:
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள காங்கிரஸ் அரசு மதித்து நடக்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அணையின்முழுப் பராமரிப்பையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்தத் தீர்ப்புக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணையின் உயரத்தை எக்காரணம் கொண்டும்உயர்த்த அனுமதிக்க மாட்டோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிடிவாதமாகக் கூறியுள்ளார்.
இந் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, கேரள காங்கிரஸ் அரசின் போக்கைக்கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு மதிக்க வேண்டும். தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யாமல், 136 அடிஉயரத்தை 142 அடி உயரமாக அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும்.
தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தால், தேவையில்லாமல் இரு மாநில நல்லுறவு பாதிக்கப்படும்.
இரு மாநிலங்களிலும் நட்புடன் பழகி வரும் இரு தரப்பு மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவர் என்றுகூறியுள்ளார் அவர்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பாராட்டியோ, வரவேற்றோ இதுவரைமுதல்வர் ஜெயலலிதா எந்தவித அறிக்கையும் நேரடியாக விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் கருணாகரனின் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ள நிலையில்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தலையிட்டால் பிரச்சினை வரும் என யோசிக்கிறாரோ என்னவோ?












Click it and Unblock the Notifications