சீட் சிக்கலுக்கிடையே திருச்சி திக் திக் மாநாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுக, இடதுசாரிகளுடனான இடப் பகிர்வே இன்னும் முடிவாகாதால் 3ம் தேதி தொடங்கவுள்ள திமுகமாநாட்டில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்படுமா என்பதுசந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

திருச்சியில் நாளை மறுதினம் திமுகவின் 9வது மாநில மாநாடு தொடங்குகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கானஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் தான் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படும்என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். கட்சிக் தாங்களி விரும்பும் தொகுதிகளின் பட்டியலைகருணாநிதியிடம் தந்துவிட்டன.

அவரும் இடதுசாரிகளுடன் முதல் கட்டமாகப் பேச்சு நடத்தினார். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை.அவர்கள் கேட்கும் அளவுக்குத் தொகுதிகள் தர திமுக தயாராக இல்லை.

அதே போல மதிமுகவைப் பொறுத்தவரை அவர்கள் கேட்கும் தொகுதிகளுக்குப் பதிலாக வேறு தொகுதிகளையேஅதிக அளவில் ஒதுக்க கருணாநிதி முன் வந்துள்ளார். இதனால் அதிலும் சிக்கல் நிலவுகிறது.

மாநாடு தொடங்கவுள்ள நிலையில் இன்றும் நாளையும் மட்டுமே கூட்டணிக் கட்சியினருடன் பேசி முடிவுக்கு வரகால அவகாசம் உள்ளது. இரு நாட்களில் தொகுதி எண்ணிக்கை விஷயத்தில் உடன்பாடு ஏற்பட்டுவிடுமா என்பதுசந்தேகமாகவே உள்ளது.

இதனால் திட்டமிட்டபடி மாநாட்டில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்படுமா என்பதுசந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

இந்த மாநாட்டில் சோனியா காந்தி, வைகோ, ராமதாஸ் உள்பட அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும்பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் சில தலைவர்கள் மாநாட்டைப்புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளது.

இதனால் படு டென்சனில் உள்ளது அறிவாலயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+