தமிழர்களை மறந்த வெளிநாட்டு இந்தியர் துறை!
டெல்லி:
வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவைப் பற்றிய லேட்டஸ்ட் நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஓவர்சீஸ் இந்தியன் என்ற இணைய தள பத்திரிக்கையை வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின், வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை சார்பில் இந்த இணைய தள பத்திரிக்கை (www.overseasindian.in) வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மாதாந்திர பத்திரிக்கையாகும். இந்தியாவைப் பற்றிய அத்தனை தகவல்களும், நாட்டு நடப்புகள் இதில் இடம் பெற்றிருக்கும்.டெல்லியில் நடந்த நகழ்ச்சியில் இந்த இணைய தள பத்திரிக்கை தொடங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டின்போது ஓவர்சீஸ் இந்தியன் பத்திரிக்கையின் அச்சுப் பிரதியை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டது நினைவிருக்கலாம்.
இணைய தள பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் வயலார் ரவி பேசுகையில், இந்தியாவில் நடைபெறும் அன்றாட நகழ்ச்சிகள் முதல் அனைத்து நிகழ்வுகளையும் இந்த இணைய தளம் வழங்கும். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
110 நாடுகளில் 2.5 கோடி இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த இணையதளம் பல வகைகளில் உதவியாக இருக்கும்.
இந்தியாவின் அசைவுகளை அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அறிந்து கொள்ள முடியும்.
இந்த இணைய தளம் மூலம் தகவல் பரிமாற்றம், உரையாடல், செய்திகள், யோசனைகள், தங்களது பிரச்சினைகளை பரிமாறிக் கொள்ள முடியும் என்றார் ரவி.
பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அச்சுப் பிரதி, இந்தி தவிர ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, குஜராத் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களை, வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை மறந்து விட்டதோ?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications