ஊட்டியில் நிலச்சரிவு: இளம் பெண் பலி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் பலியானார். மேலும் இரண்டுபெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.ஊட்டி அருகே உள்ளது சீட்டுக்கல் என்ற இடம். அங்கு சுற்றுச் சுவர் அமைப்பதற்கான பள்ளம் தோண்டும்பணியில் 13 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து வேலையாட்கள்சிதறி ஓடினர்.
இதில் 3 பெண்கள் மட்டும் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி 2 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
ஆனால் ஜெயஸ்ரீ என்ற பெண்ணை மட்டும் அவர்களால் உயிருடன் மீட்க முடியவில்லை. மண்ணுக்குள் புதைந்துவிட்டதால் மூச்சுத் திணறி ஜெயஸ்ரீ இறந்து விட்டார்.












Click it and Unblock the Notifications