மத்திய பட்ஜெட்டில் தமிழ் வளர்ச்சிக்கு ரூ1 கோடி
டெல்லி:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ் வளர்ச்சிக்கு ரூ. 1 கோடிஒதுக்கப்பட்டுள்ளது.
செம்மொழி அந்தஸ்து பெற்றதையடுத்து தமிழுக்கு இந்த சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழ் வளர்ச்சிக்கு மேம்பாட்டு வாரியம் அமைக்கவும், மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மையத்தில்தமிழ் வளர்ச்சிக்கு மையம் அமைக்கவும்,
தமிழ் பேசப்படாத பகுதிகளில் தமிழ் பயிற்றுவிக்கவும், படிக்கும் மாணவ, மாணவியருக்கு உதவித் தொகைவழங்கவும்,
சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு கெளரவ சான்றிதழ் வழங்கவும், மேல்நிலைப் பள்ழிகளில் தமிழ் பயிற்றுவிப்புக்கானசிறப்பு பயிற்சிகள் அளிக்கவும் இந்த நிதி செலவிடப்படும்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ப.சிதம்பரம், கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்துஇவ்வுலகு என்ற குறளை மேற்கோள் காட்டி, அதற்கான விளக்கத்தையும் ஆங்கிலத்தில் அளித்தார்.
கவனம் சிதறாமல் செயல்படும் அரசர்க்கு இந்த உலகமே உரிமையாகும் என்று சிதம்பரம் விளக்கம் கூறியபோது,காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி மகிழ்ந்தனர்.
இட்லி, தோசை மிக்ஸ்களுக்கு சிதம்பரம் வரிச் சலுகையை அறிவித்தபோது, தமிழர்களின் உணவு என்பதால் இந்தசலுகையா என்று சிரித்தபடியே பல கட்சியினரும் கேள்வி எழுப்பினர்.
நளின் சிதம்பரம் 10க்கு 10 மார்க்:
தனது கணவரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10க்கு 10 மதிப்பெண்கள் தருவதாக அவரது மனைவிநளினி சிதம்பரம் கூறியுள்ளார்.
ப.சிதம்பரம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததை நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநநிஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வந்து நேரில் பார்த்தனர்.
பார்வையாளர் மாடத்தில் நளினியும், சபாநாயகர் மாடத்திலிருந்து கார்த்தி, ஸ்ரீநிதி ஆகியோரும்அமர்ந்திருந்தனர்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் வெளியே வந்த அவர்களை செய்தியாளர்கள் சூழ்ந்தனர்.
அப்போது பட்ஜெட் குறித்து நளினி கூறுகையில், நான் 10க்கு பத்து மார்க் கொடுக்கிறேன். ஒவ்வொரு வருடமும்சிறந்த முறையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் எனது கணவர். வீட்டு உபயோகப் பொருட்களின் விலைவெகுவாக குறையும். எனவே இல்லத்தரசிகளுக்கு சந்தோஷம் தரும் பட்ஜெட் இது என்றார்.












Click it and Unblock the Notifications