2 தமிழக கோவில்களுக்கு யுனெஸ்கோ கெளரவம்!
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் சிவன் கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்ஆகியவற்றை உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரித்து யுனெஸ்கோ அமைப்பு சான்றிதழ் அளித்துள்ளது.
தஞ்சையில் 1,000 ஆண்டுகளுக்கு முன் மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில்(பெரிய கோவில்), தமிழர்களின் கட்டடக் கலையின் பெருமையை உலகுக்கே பறை சாற்றும் மிகப் பெரியசான்றாக விளங்கி வருகிறது.சோழர் கால கட்டடக் கலையின் சிறப்பை, நுணுக்கத்தை வியந்து பாராட்டி யுனெஸ்கோ அமைப்பு கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலை உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரித்தது.
தற்போது சோழர் கால கட்டடக கலையை பறை சாற்றும் மேலும் 2 கோவில்களுக்கு அந்த கெளரவத்தையுனெஸ்கோ அளித்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோவில் மற்றும் தாராசுரம் ஐராவதீஸ்வரர்கோவில் ஆகியவையும் உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெரிய கோவிலுடன் சேர்த்து இந்த இரண்டு கோவில்களும் உலக பாரம்பரியச் சின்னமாககெளரவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான பட்டயங்களை இந்திய தொல்லியல் துறையிடம் யுனெஸ்கோ அமைப்பு வழங்கியது.












Click it and Unblock the Notifications