பல்டிக்கு தயாராகும் வைகோ-அதிமுகவுக்கு ஜம்ப்?
சென்னை:
மதிமுக முன்னணித் தலைவர்களுடன் வைகோ, தனது பண்ணை வீட்டில் நீண்ட நேர ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
திமுகவில் தாங்கள் விரும்பும் தொகுதிகள் கிடைக்காது என்று உறுதியாகத் தெரிய வந்துள்ளதால் அதிமுக அணிக்குப் போவதுதான் ஒரே வழி என்று மதிமுக முன்னணியினர் வைகோவை வலியுறுத்தியுள்ளனர்.தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுக்கும், மதிமுகவுக்கும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. வைகோவின் போக்கினால் அதிருப்தி அடைந்த திமுக தலைமை, பொருளாளர் ஆற்காடு வீராசாமியை விட்டு ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் நாணயமற்ற அரசியலை நடத்துகிறார் வைகோ என்று கடுமையாக சாடியிருந்தார் ஆற்காடு வீராசாமி.
இந்த அறிக்கை வெளியான அடுத்த நாளே வைகோ பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் திமுக அணியிலேயே மதிமுக நீடிக்கும் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இதனால் வைகோவின் வரவை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த அதிமுக கடும் அதிர்ச்சிக்குள்ளானது.
அறிக்கை விட்ட அடுத்த சில நாட்களிலேயே திமுக தலைவர் கருணாநிதியை போய் சந்தித்தார் வைகோ. அந்த சந்திப்பின்போது திமுக தலைவர்கள் யாரும் கருணாநிதியுடன் இருக்கவில்லை. அதேபோல வைகோவுடன் மதிமுக தலைவர்கள் யாரும் வரவில்லை.
இதிலிருந்தே, திமுக உறவை மதிமுகவினர் விரும்பவில்லை என்பதும், வைகோவின் வருகையை திமுகவினர் விரும்பவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமானது.
இருப்பினும் வைகோவின் அறிவிப்பை கருணாநிதி மிகுந்த சந்தோஷத்தோடு வரவேற்று பேட்டி கொடுத்தார். வைகோவும், திமுக அணியில் நீடிப்பதில் சந்தோஷம்தான் என்று பேசினார்.
இந் நலையில் தங்களுக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்று கோரி கருணாநிதியிடம் வைகோ கொடுத்த தொகுதிப் பட்டியலை திமுக தலைமை பரிசீலித்தது. அதில் வைகோ கோரிய பெரும்பாலான தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் கேட்பதால் அவற்றை மதிமுகவுக்கு ஒதுக்க முடியாத நிலை இருப்பதாக வைகோவுக்குத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கூட்டணியில் தன்னால் நீடிப்பது கஷ்டம் என்று திமுகவுக்கு தகவல் அனுப்பினன் வைகோ.
அதைத் தொடர்ந்து சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் வீட்டிற்கு நேற்று இரவு ஆற்காடு வீராசாமி திடீரென சென்று வைகோவைச் சந்தித்தார். அப்போது திமுக தரப்பில் ஒதுக்கத் தயாராக உள்ள தொகுதிகள் குறித்து ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதைக் கேட்டதும் வைகோ அதிர்ச்சியும் டென்சனும் அடைந்தாராம்.
காரணம், அவர் கொடுத்த பட்டியலிலிருந்து 5 முதல் 10 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படக் கூடிய சூழ்நிலை இருப்பதாக ஆற்காடு தெரிவித்ததுதான். மேலும் வைகோ கோரியபடி 25 தொகுதிகளைத் தர இயலாது, 20 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் ஆற்காடு கூறியுள்ளார்.
இச் சந்திப்பின்போது, தான் விடுத்த அறிக்கையில் நாணயமற்ற அரசியல்வாதி என்று விமர்சித்ததற்காக வைகோவிடம் ஆற்காடு வீராசாமி மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கலைஞரிடம் பேசி 23 தொகுதிகள் வரை பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் ஆற்காடு கூறினாராம்.
ஆற்காடு வீராசாமி பேசப் பேச வைகோவின் முகத்தில் கோபம் தாண்டவமாடியதாக சொல்கிறார்கள்.
இருப்பினும் அவரிடம் எந்தக் கருத்தையும் கூறாமல், கலைஞரிடம் பேசிக் கொள்கிறேன் என்று ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லி ஆற்காட்டாரை அனுப்பி வைத்திருக்கிறார்.
இந் நிலையில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தனது பண்ணை வீட்டில், இன்று கட்சியின் மூத்த நிர்வாகிகளைக் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார் வைகோ.
அப்போது, திமுகவை நிம்புவதை விட்டு விட்டு பேசாமல் அதிமுக அணிக்குப் போய் விடலாம். அதிமகவுடன் இதுகுறித்துப் பேசி விட்டோம். 40 தொகுதிகள் தர அவர்கள் சம்மதித்துள்ளார்கள். கூடுதலாக 5 தொகுதிகள் கேட்போம், கொடுப்பதாக உறுதியளித்தால் அணி மாறி விடலாம் என வைகோவிடம் எல்.கணேசன், கண்ணப்பன் உள்ளிட்ட அதிமுக ஆதரவு முன்னணித் தலைவர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
தலைவர்களின் இந்த யோசனையைக் கேட்ட வைகோ, யோசிக்க அவகாசம் கொடுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.
மதிமுகவின் இந்த திடீர் போக்கு திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக, இனியும் வைகோவைத் தாங்கிக் கொண்டிருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்து விட்டதாக சொல்கிறார்கள்.
அதேசமயம், அதிமுக தரப்பு புத்துணர்வு பெற்றுள்ளதாகவும், வைகோவுடன் பேசும் சேனல்களை ஆக்டிவேட் செய்திருப்பதாகவும் தெரிகிறது.
இது திமுகவை மிரட்டி அதிக இடங்களை வாங்கவா அல்லது உண்மையிலேயே அதிமுகவுக்கே போய்விடும் திட்டமா என்று தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications