கட்-அவுட்கள், பேனர்களை தூக்க உத்தரவு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
தேர்தல் நடத்தை விதிமுறையின் கீழ், அரசியல் கட்சிகள் வைத்துள்ள கட் அவுட்கள், பேனர்கள், கொடிகள் ஆகியவற்றை அகற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என சிறப்பு தேர்தல் அதிகாரி சந்திரபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த சந்திரபிரகாஷ், வேலூர், ராணிப்பேட்டை, ஆத்தூர் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன.
எனவே, அரசியல் கட்சிகள் பொது இடங்களில் வைத்துள்ள கட் அவுட்கள், பேனர்கள், கொடிகள் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தில் 8 லட்சம் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வரும் 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார் சந்திரபிரகாஷ்.












Click it and Unblock the Notifications