For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டணி தலைவர்களுடன் கருணாநிதி பேச்சு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

கூட்டணியை விட்டு வெளியேறும் வைகோவின் முடிவு குறித்து கருத்துத் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதிமறுத்துவிட்டார்.

திருச்சியில் இன்று அவரை நிருபர்கள் சந்தித்து வைகோவின் முடிவு குறித்து கருத்து கேட்டபோது, இதில் நான்சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார்.

நீங்கள் 22 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று சொன்னதால் தான் வைகோ விலகிவிட்டாரா என்றுகேட்டதற்கு, எனக்குத் தெரியாது என்று பதிலளித்த கருணாநிதி மேற்கொண்டு நிருபர்களின் கேள்விகளுக்குபதிலளிக்க மறுத்துவிட்டார்.

ஆச்சரியம் இல்லை: ஸ்டாலின்

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறுகையில்,

வைகோ எப்போதோ அங்கே (அதிமுக) போய் விட்டார். அது இப்போது உறுதியாகியிருக்கிறது, இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அவரது விலகல்எனக்கு வியப்பை அளிக்கவே இல்லை என்றார்.

இதற்கிடையே, மதிமுக விலகலால் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலை குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கருணாநிதி இன்றுதொலைபேசியில் அவசர ஆலோசனை நடத்தினார்.

வைகோ இல்லாததால் மற்ற கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் தருவதில் இருந்த சிக்கல் திமுகவுக்கு ஓரளவுக்குத் தீர்ந்துள்ளது.

இதையடுத்து அனேகமாக திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து இன்றைக்குள் தீர்மானிக்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.நாளை மாநாட்டில் சிறப்புரையாற்றும்போது கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பை கருணாநிதி வெளியிடக் கூடும்என எதிர்பார்க்கப்படுகிறது.

அடித்து நொறுக்கப்பட்ட வைகோ கட்-அவுட்:

இந் நிலையில் திருச்சி மாநாட்டுத் திடலில் மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கட்-அவுட்களுடன் வைக்கப்பட்டிருந்த வைகோவின் கட்-அவுட்டைதிமுக தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

வைகோவுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி அந்த 60 அடி கட்-அவுட்டை தொண்டர்கள் உருட்டுக் கட்டைகளால் உடைத்து எறிந்தனர்.

மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று கருணாநிதி விழா மலரை வெளியிட்டார். தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் பேசிவருகின்றனர்.

வைகோவைத் தாக்கிப் பேசப் வேண்டாம் என நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிப்பு இல்லை: காங்கிரஸ்

இதற்கிடையே திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகியுள்ளதால், தமிழகத்திலும், தேசியஅரசியலிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று நாடாளுமன்ற விவகாரத்துறைஅமைச்சர் பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், வைகோ தலைமையிலான மதிமுக தமிழகத்தில் திமுககூட்டணியிலிருந்து விலகியுள்ளதால், திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும்ஏற்படாது.

அதேபோல, மத்திய அமைச்சரவையில், மதிமுக இடம் பெறவில்லை. எனவே மத்தியஅரசுக்கோ, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கோ மதிமுகவால் எந்தவித சிறியபாதிப்பும் ஏற்படாது என்றார் முன்ஷி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X