For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்க சத்துக்கு ஏற்ப சீட் கேட்போம்-திண்டீஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எங்களது பலத்துக்கேற்ப அதிமுகவிடம் சீட் கேட்போம் என்று தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் தலைவர்திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

திமுகவிடம் 120 தொகுதிகளை வாங்க வேண்டும், கூட்டணி ஆட்சி தான் அமைய வேண்டும் என்று அதிமுகவின்குரலை காங்கிரசுக்குள் கொடுத்து கலகம் செய்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி.

அதிமுகவின் முழு ஆதரவுடன் காங்கிரசில் குழப்பம் செய்து கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். இப்போதுஅதிமுக பின்னணியில் தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்தக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர்செய்தியாளர்களிடம் திண்டிவனம பேசுகையில், திராவிடக் கட்சிகளுக்கு இணையாக இடங்கள் ஒதுக்க வேண்டும்என்பு கோரினேன். அப்போது நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன்.

இப்போது நான் காங்கிரஸ் கட்சியில் இல்லை. தனியாக கட்சி ஆரம்பித்துள்ளேன். எனவே எனது வலிமைஎன்னவோ அதற்கேற்ப அதிமுகவிடம் சீட் கேட்பேன். (அப்ப 120 தொகுதி?, நாங்கள் தான் உண்மையானகாங்கிரஸ் என்று இதே வாயால் சொன்னது?)

அடுத்த தேர்தலில் வலிமையை அதிகரித்து விடுவோம். விடுதலைச் சிறுத்தைகளுக்கும், எங்களுக்கும் வலிமையில்வித்தியாசம் உள்ளது. எனவே எங்களது வலிமைக்கேற்பதான் சீட் கேட்போம். (மீசையில் நோ மண்)

வைகோ விடுதலைப் புலிகளின் அனுதாபி என்பது குறித்து கவலைப்படவில்லை. (ஜெமினி சர்க்கஸில் சேர்ந்துபல்டி அடிப்பவர்களுக்கு பயிற்சியாளராக இவரை சேர்த்துக் கொள்ளலாம். வைகோவுடன் கூட்டணிவைத்துள்ளதற்காக சோனியாவை போன மாசம் வரை விமர்சித்தவர் இவர்). அவர் ராஜீவ் காந்திகொலையாளிகளை ஒருபோதும் ஆதரித்ததில்லை.

எனவே அதிமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றிருப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை (இருந்தாலும்அதை ஜெயலலிதாவிடம் போய் சொல்லத்தான் முடியுமா?) என்றார் திண்டிவனம் ராமமர்த்தி.

பாவம் திண்டிவனம்... எம்புட்டு கஷ்டம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X