வெல்லுங்கள் ஷார்ஜா-இந்தியா ப்ரீ-டிக்கெட்
துபாய்:
அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே இன்னொரு வன்னியர் கட்சிஉருவாகியுள்ளது. முன்பு பாமகவில் இருந்த தர்மபுரி மாஜி எம்பி பு.தா. இளங்கோவன்பாட்டாளி முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளார்.
துபாயில் செயல்பட்டு வரும் இந்தியன் முஸ்லீம் அசோசியேசன் (ஈமான்) சார்பில் நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தையொட்டி மீலாத் பேச்சுப் போட்டி நடக்கவுள்ளது.இது குறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் லியாகத் அலி கூறுகையில்,
கடந்த 10 ஆண்டுகளாக வருடந்தோறும் நடந்து வரும் இந்தப் பேச்சுப்போட்டி இம்முறை வரும் 31ம் தேதிமாலை நடக்கிறது.
அறிஞர்கள் பார்வையில் அண்ணலார் (ஸல்), அண்ணலாரும் அரசியலும், பெருமானாரின் வீரமும் பொறுமையும்ஆகிய 3 தலைப்புகளில் போட்டியாளர்கள் பேசலாம்.
ஆண், பெண் போட்டியாளர்கள இதில் பங்கேற்றலாம். மேற்கொண்டு விபரங்களுக்கு முகைதீன்- 050 5853888,முகம்மத் தாஹா- 050 6241625, முகம்மத் ஹிதாயத்- 050 7752737, 5196433 ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம். தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக இந்தியன் ஏர்லைன்ஸ் வழங்கும் ஷார்ஜா-திருச்சி-ஷார்ஜாஇருவழி விமான டிக்கெட்டும்,
இரண்டாம் பரிசாக எமிரேட்ஸ் நிறுவனம் வழங்கும் துபாய்-சென்னை-துபாய் இருவழி விமான டிக்கெட்டும்,
மூன்றாம் பரிசாக ஈடிஏ அலிகான் நிறுவனம் வழங்கும் ஏர்கண்டிசனர் வழங்கப்படும்.
பங்கேற்க விரும்புவோர் 21ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.