For Daily Alerts
Just In
குப்பைத் தொட்டியில் ரூ. 35 லட்சம் பணம்!
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே குப்பைத் தொட்டியில் ரூ. 35 லட்சம்பணத்தை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
குடியாத்தம் அக்ராவரம் பகுதியில் டி.எஸ்.பி. முருகேசன் தலைமையிலான போலீஸார்இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குப்பைத் தொட்டி அருகே ஒருவர்நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்த போலீஸார் விசாரணை நடத்தியதில்,அவரது பெயர் அஜய் என்றும் அக்ராவரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக அந்தநபர் பேசினார். இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச்சென்று உரிய முறையில் விசாரித்தனர்.
அப்போது, அந்த நபர் நின்று கொண்டிருந்த குப்பைத் தொட்டியில், பணத்தை பதுக்கிவைத்திருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து குப்பைத் தொட்டிக்கு விரைந்து சென்றபோலீஸார் அதை கிளறிப் பார்த்தபோது ரூ. 35 லட்சம் பணம் கட்டுக் கட்டாக அடுக்கிபதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பணம் எப்படி கிடைத்தது, யார் கொடுத்தது என்பது குறித்து அஜய்யிடம்போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Story first published: Tuesday, March 7, 2006, 5:30 [IST]