For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் ஜெ-வைகோ சந்திப்பு: புதுவையில் 2 சீட்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக கூட்டணியில், தமிழகத்தில் 35 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள மதிமுகவுக்கு, பாண்டிச்சேரியில் 2தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் புதுவையில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து சட்டசபைத் தேர்தலை சந்திக்கிறது மதிமுக. தமிழகதொகுதிப் பங்கீடு இறுதியாகி முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து அதற்கான கடிதத்தைப் பெற்றார் மதிமுகபொதுச் செயலாளர் வைகோ.

பாண்டிச்சேரி இடப் பகிர்வு தொடர்பாக மதிமக அவைத் தலைவர் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன்,கண்ணணப்பன், திருப்பூர் துரைசாமி உள்ளிட்டோர் ஓ.பி, செங்கோட்டையன், ஜெயக்குமார், மணியன் ஆகியோர்அடங்கிய அதிமுக குழுவுடன் பேச்சு நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் இறுதியில், புதுவையில் மதிமுகவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்க முடிவானது.

இதைத் தொடர்ந்து வைகோ போயஸ் கார்டன் விரைந்தார். ஜெயலலிதாவை சந்தித்து ஒப்பந்தத்தில்கையெழுத்துப் போட்டார்.

இதன் மூலம் புதுவையில் நான்கு கட்சிகள் கொண்ட கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது. மொத்தம்உள்ள 30 தொகுதிகளில் கண்ணனின் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், மதிமுக,விடுதலைச் சிறுத்தைகளுக்கு தலா 2 தொகுதகிளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 16 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும் எனத் தெரிகிறது. வேறு புதிய கட்சிகள் கூட்டணியில்சேருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X