வைகோ: கருணாநிதியுடன் பேச காங். முடிவு
டெல்லி:
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மதிமுக நீடிப்பது குறித்து திமுகதலைவர் கருணாநிதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவுசெய்யப்படும் என காங்கிரஸ் கட்சி திடீரென அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து கழன்று கொண்ட மதிமுக, மத்திய ஐக்கிய முற்போக்குக்கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என அறிவித்துள்ளது.ஆனால் திமுக தலைவர் கருணாநிதி, திருச்சியில் அளித்த பேட்டியில், மதிமுக, மத்தியகூட்டணியில் நீடிக்க முடியாது. அதை நாங்கள் அனுமதிக்கவும் முடியாது என்றுதிட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
ஆனால், கூட்டணயில் வைகோ நீடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றுநாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியும், காங்கிரஸ்செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்கிவியும் கூறியிருந்தனர்.
லாலு பிரசாத், பாஸ்வான் பாணியில், மதிமுகவும், திமுகவும் காங்கிரஸ் கூட்டணியில்நீடிக்கலாம் என்றனர்.
இவர்களது கருத்துக்கு காங்கிரஸ் தலைமையிடம் திமுக கடும் எதிர்ப்புத்தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மதிமுக தொடர்பாக கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுடன் பேசிமுடிவு செய்யப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டெல்லியில் செய்தியாளர்களிடம்கூறுகையில், (இவர்தான் வைகோ நீடிப்பதில் தவறில்லை என்று கூறியவர்), ஐக்கியமுற்போக்குக் கூட்டணியின் அனைத்து முடிவுகளும் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துபேசியே எடுக்கப்படுகின்றன.
வைகோ குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்யப்படும்.மதிமுகவுக்கும் தனது தரப்பு கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
அதேசமயம், கருணாநிதியின் கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்சிங்வி.












Click it and Unblock the Notifications