For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எய்ட்ஸ் பீதி: கோவை சிறை கைதிகள் அச்சம்!

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை சிறையில் எய்ட்ஸ் பரவுவதாகக் கூறி சிறைக்குச் செல்ல மறுத்து கோவைதொடர் குண்டு வெடிப்புக் கைதிகள் 160 பேர் நீதிமன்ற வளாகத்தில் உள்ளிருப்புப்போராட்டம் நடத்தினர்.

கோவை சிறையில் தொடர் குண்டுவெடிப்புக் கைதிகள் உள்பட 2,500 பேர்அடைக்கப்பட்டுள்ளனர். கோவை சிறையில் கடந்த ஆண்டில் மட்டும் 10 கைதிகள்எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதனால் அங்குள்ளகைதிகளிடையே பெரும் அச்சம் நிலவுகிறது.

சிறையை விட்டு வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவாக உள்ளநிலையில் எய்ட்ஸ் தாக்கி கைதிகள் அடுத்தடுத்து இறப்பதால் சிறையில் எய்ட்ஸ்பரப்பப்படுவதாக அவர்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந் நிலையில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 160 கைதிகள்,கோவை சிறப்பு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். விசாரணை முடிந்தபின்னர் மீண்டும் அனைவரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனால் சிறைக்கு வர முடியாது என்று கூறி கைதிகள் நீதிமன்ற வளாகத்திலேயேஅமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

சிறைக்குள் எய்ட்ஸ் நோய் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும், எனவே அங்கு செல்லமுடியாது என்றும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X