வைகோ சென்னையில் போட்டி?
சென்னை:
சென்னையில் நிலவி வரும் திமுகவின் ஆதிக்கத்தை தகர்க்கும் வகையில் கூட்டணிக்கட்சித் தலைவர்களை சென்னை நகர தொகுதிகளில் போட்டியிட வைக்க ஜெயலலிதாதிட்டம் வகுத்துள்ளதாகத் தெரிகிறது.
திமுக கூட்டணிக்கு நிகராக அதிமுக கூட்டணியும் படிப்படியாக பலமடைந்துவருகிறது. வைகோ மற்றும் திருமாவளவன் என இரு பெரும் சக்திகளை தன் பக்கம்ஈர்த்துள்ள ஜெயலலிதா, அவர்களை வைத்து திமுகவுக்கு சில அதிர்ச்சிவைத்தியங்களை அளிக்கத் திட்டமிட்டுள்ளார்.அதன்படி வைகோ மற்றும் திருமாவளவனை சென்னை நகர தொகுதிகளில்போட்டியிடுமாறு அவர் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டுள்ளதாகத்தெரிகிறது.
அதன்படி சென்னை அண்ணா நகரில் வைகோவும், எழும்பூர் தொகுதியில்திருமாவளவனும் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கைவைத்துள்ளாராம்.
வைகோவின் சென்னை வீடு அண்ணா நகர் பகுதியில்தான் உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
அண்ணா நகர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. திமுக பொருளாளர் ஆற்காடுவீராசாமி. நாணயற்ற அரசியல்வாதி என வைகோவை கடுமையாக விமர்சித்துஅறிக்கை வெளியிட்டவர் ஆற்காடு என்பதால், அவரைப் பழி தீர்க்க அண்ணா நகரில்வைகோ போட்டியிட வேண்டும் என்று கோரியுள்ளாராம் ஜெயலலிதா.
அதேபோல எழும்பூர் தொகுதியில் தற்போது திமுகவின் பரிதி இளம்வழுதிஎம்.எல்.ஏ.வாக உள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜான்பாண்டியன் பெரும் ரவுடித்தனம் செய்து கள்ள ஓட்டுப் போட்டும் கூட 86 வாக்குகள்வித்தியாசத்தில் வென்றவர் பரிதி.
திமுகவின் இளம் தலைவர்களில் மிக முக்கியமானவர். ஸ்டாலினின் போர்ப்படைத்தளபதிகளில் ஒருவர். சட்டசபையில் கடந்த 10 ஆண்டுகளாக தனக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வரும் பரிதியை வீழ்த்த திருமாவளவனால் மட்டுமே முடியும்என கணக்குப் போட்டுள்ளார் ஜெயலலிதா.
இதேபோல ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினின் ஆதிக்கத்தைமுவுக்குக்கொண்டு வரும் திட்டத்துடன் முன்னாள் அமைச்சரும், ஆயிரம் விளக்கு தொகுதியின்நிரந்தர செல்லப் பிள்ளையாக பல காலம் கோலோச்சியவருமானகே.ஏ.கிருஷ்ணசாமியின் மகன் கே.ஏ.கே. முகிலனை அதிமுக சார்பில் நிறுத்தஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
நடிகர் ராதாரவியும், சென்னை நகரின் முக்கியத் தொகுதி ஒன்றில் நிறுத்தப்படுகிறார்.இதுதவிர பெரம்பூர் தொகுதியில் மதிமுகவின் தென் சென்னை மாவட்ட செயலாளர்வேளச்சேரி மணிமாறன் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.
பண பலம் படைத்த மணிமாறன் கடுமையாக உழைக்கக் கூடியவர் என்பதால் நிச்சயம்அவரை வெற்றி பெற வைக்க முடியும் என ஜெயலலிதா கருதுகிறார்.
பார்ப்போம்...












Click it and Unblock the Notifications