ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம்..!
சென்னை:
தமிழக அரசு வழங்கியுள்ள இலவச வேட்டி, சேலைகளை பாத்திர வியாபாரிகளுக்குப்போட்டு புதிய பாத்திரம் வாங்குவதில் சென்னை நகர மக்கள் படு மும்முரமாகஉள்ளனர்.
வீட்டில் உள்ள பழைய துணிகளை, நடமாடும் பாத்திர வியாபாரிகளிடம் போட்டுஅதற்குப் பதிலாக புதிய பாத்திரங்களை வாங்கும் பழக்கம், தொன்றுதொட்டு இருந்துவருகிறது.பழைய துணிகளுக்கு ஒரு விலை போட்டு அதற்கு ஈடான பிளாஸ்டிக், எவர்சில்வர்பாத்திரம் வாங்குவார்கள். இதற்கு பெரும்பாலும் வீட்டில் பயன்படுத்தப்படாமல்உள்ள, பழைய, கிழியாத துணிகளைத்தான் போடுவார்கள்.
ஆனால் சென்னையில் புதிய துணிகளைப் போட்டு பாத்திரங்களை வாங்குகிறார்கள்பெண்கள்.
அவர்கள் போடும் புதிய துணிகள் எது தெரியுமோ? தமிழக அரசு இலவசமாகவழங்கிய வேட்டி, சேலைகள்தான்.
சென்னை நகர மக்கள் இந்த வேட்டி, சேலையை விற்பதற்கு இரண்டு காரணங்கள்.தேர்தலை மனதில் வைத்து மிகக் குறுகிய காலத்திற்குள் இரண்டு முறை அவர்களுக்குஇந்த இலவச வேட்டி, சேலை கிடைத்துள்ளது.
முதலில் வெள்ள நிவாரண நிதியுடன் சேர்த்து வாங்கினர். பின்னர் பொங்கலுக்காகவாங்கினர்.
இந்த வேட்டியும், சேலையும் குவாலிட்டி மிகக் குறைவு. மேலும் அதில் தமிழ்நாடுஅரசு முத்திரை வேறு இருப்பதால் அதை வெளியில் கட்டிக் கொண்டு போகமுடியவில்லை.
சும்மா வீட்டில் வைத்திருப்பதற்கு பதில் பாத்திர வியாபாரியிடம் போட்டால் ஏதாவதுபாத்திரமாவது வாங்கலாமே என்று பண்டமாற்று முறையை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்தத் துணிகளுக்கு பாத்திர வியாபாரிகளிடம் நல்ல டிமாண்ட் இருப்பதால் சென்னைநகரின் பல பகுதிகளிலும் இலவச வேட்டி, சேலைகளை பாத்திர வியாபாரிகளுக்குபோடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சேலைக்கு 30 ரூபாயும், வேட்டிக்கு 10 ரூபாயும் பாத்திர வியாபாரிகள் ரேட்நிர்ணயித்துள்ளனர்.
இந்த சேலைகளை வாங்கும் பாத்திர வியாபாரிகள், பின்னர் அந்த வேட்டி,சேலைகளை கொண்டு போய் நன்கு துவைத்து அதில் உள்ள தமிழக அரசின்சின்னத்தை அழித்து விடுகின்றனர். பின்னர் அவற்றை கூடுதல் விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்று காசு பார்க்கின்றனர்.
ஆனால் இவற்றை வாங்குவதற்கு அவர்கள் விதிக்கும் ஒரே நிபந்தனை, வேட்டியும்,சேலையும் கிழியாமல் புத்தம் புதிதாக இருக்க வேண்டும் (இல்லாவிட்டால்திரும்பவும் விற்க முடியாதே!)
ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம்..












Click it and Unblock the Notifications