ஐடியலுக்கு 32 வழக்குகளிலும் ஜாமீன்!
சென்னை:
மோசடி மன்னன் ஐடியல் சுப்பிரமணியத்தின் மீது தொடரப்பட்ட 32 வழக்குகளிலும்அவருக்கு ஜாமீன் கிடைத்து விடுதலை ஆகியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ஐடியல் சுப்ரமணியம்,ஐடியல் என்ற பெயரில் கொடைக்கானலை மையமாகக் கொண்டு ஏகப்பட் பிசினஸில்ஈடுபட்டு வந்தார்.அதில் ஒன்றாக பண மோசடி பிசினஸையும் பக்கவாக செய்து வந்தார். ஆனால் அதில்சுதாரிப்பாக இல்லாததால், போலீஸில் சிக்கினார்.
கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக சுப்பிரமணியம் உள்ளிட்ட ஆறுபேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை மத்திய சிறையில் தற்போதுஅனைவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஐடியல் மீது சென்னையில் 7, திண்டுக்கல்லில் 23, நாகர்கோவிலில் ஒன்று,காஞ்சிபுரத்தில் ஒரு வழக்கு என மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.அத்தனை வழக்குகளில் ஜாமீன் கோரி சம்பந்தப்பட்ட ஊர் நீதிமன்றங்களில் ஐடியல்சார்பில் மனு போடப்பட்டது.
அத்தனை வழக்குகளிலும் தற்போது ஐடியலுக்கு ஜாமீன் கிடைத்து விட்டது.திண்டுக்கல்லில் தங்கி அங்குள்ள காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திடவேண்டும் என அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து விடுதலையான ஐடியல் தற்போது திண்டுக்கலில் தங்கியிருந்துகையெழுத்துப் போட்டு வருகிறார்.
ஐடியலுக்கு முன்பே பண மோசடி வழக்கில் சிக்கி கைதான சீனியர் ஆதிகேசவன்தொடர்ந்து சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.