நாளை முதல் திமுக வேட்பாளர் நேர்காணல்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி மனு செய்துள்ள திமுகவினரிடம் நாளைமுதல் 20ம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது.
திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிட சீட் கேட்டுஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.இந் நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், விண்ணப்பம் தந்துள்ள கட்சியினரை திமுக தலைவர் கருணாநிதி10ம் தேதி காலை 9.30 மணி முதல் மாவட்டரீதியாக, அண்ணா அறிவாலயத்தில்நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்துஆராய்ந்து அறிந்திடவுள்ளார்.
குறிப்பிட்ட தொகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட் கழகசெயலாளர், மாவட்ட கழக நிர்வாகிகள், தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, பகுதி, நகரகழக செயலாளர்கள் மட்டுமே நேர்காணலுக்க வர வேண்டும். ஆதரவாளர்களையோ,பரிந்துரையாளர்களையோ கண்டிப்பாக அழைத்து வரக் கூடாது என்று கூறியுள்ளார்.
மாவட்ட ரீதியாக நேர்காணல் நடக்கும் தேதி விவரம்:
10ம் தேதி - தென் சென்னை, வட சென்னை
11ம் தேதி - திருவள்ளூர்
12ம் தேதி காஞ்சிபுரம்
13ம் தேதி - வேலூர், திருவண்ணாமலை, மாலை - தர்மபுரி, கிருஷ்ணகிரி
14ம் தேதி - காலை விழுப்புரம், கடலூர். மாலை - நாகை, திருவாரூர்
15ம்தேதி - காலை திருச்சி, கரூர், பெரம்பலூர். மாலை - தஞ்சை, புதுக்கோட்டை
16ம் தேதி - மாலை மதுரை, மதுரை புறநகர்
17ம் தேதி - காலை தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம். மாலை - விருதுநகர், நெல்லை
18ம் தேதி- காலை தூத்துக்குடி, கன்னியாகுமரி. மாலை - சேலம், நாமக்கல்.
19ம் தேதி - காலை கோவை, ஈரோடு, நீலகிரி
20ம் தேதி- பாண்டிச்சேரி மாநிலம்