பாமகவுக்கு 31 சீட்?: திமுக இழுபறி
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சிக்கு 31 சீட் கொடுக்க திமுக முன் வந்துள்ளது. அதற்குராமதாஸும் சம்மதம் தெரிவித்து விட்டார் எனத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் பாமகவுக்கான தொகுதிப் பங்கீடு புதன்கிழமை மாலை இறுதியாகிஇரு கட்சித் தலைவர்களும் கையெழுத்து போடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.இதைத் தொடர்ந்து நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களும்,புகைப்படக்காரர்களும் குவிந்தனர்.ஆனால் பாமக தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டது.இந்த நலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக, மகிழ்ச்சியாக நடந்துவருகிறது. பாமக போட்டியிடும் தொகுதிகள் ஏறக்குறைய முடிவு செய்யும் நிலையைஅடைந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை (இன்று) மாலையில் அல்லதுவெள்ளிக்கிழமை காலையில் வெளியாகும்.
தொகுதிப் பங்கீடு விஷயத்தில் எங்களுக்கும் திமுகவுக்கும் இடையே பிரச்சனைஏற்பட்டுவிட்டதாக வழக்கம் போல, உளவுத் துறையினர் பரப்பும் வதந்திகளைபாமகவினர் யாரும் நம்ப வேண்டாம்.
உளவுத் துறையினர் பொய்யான வதந்திகளைப் பரப்பும் கோயபல்ஸ் வேலையில்இறங்கி விட்டதாக தகவல் எட்டியுள்ளது. அந்த வதந்திகளை கட்சியினர் புறக்கணிக்கவேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
ராமதாஸ் இவ்வாறு கூறினாலும், செவ்வாய்க்கிழமை கருணாநிதியும், ராமதாஸும்சந்தித்தபோதே, தொகுதிப் பங்கீடு முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி 35 தொகுதிகிள் கேட்டு வந்த பாமகவுக்கு, 30 சீட்கள் தருவதாகக்கருணாநிதி கூற, பாமக தொடர்ந்து இழுபறி செய்ய, கடைசியில் 1 சீட் கூடுதலாகத்தருவதாகக் கூறி அனுப்பினார் கருணாநிதி.
இதையடுத்து திரும்பிப் போன ராமதாஸ், 31 தொகுதிகளுக்கு ஓகே சொல்லிதுரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் மூலம் கருணாநிதிக்கு தகவல் அனுப்பினார்.
என்னென்ன தொகுதிகள் என்பதையும் கருணாநிதியும் ராமதாசும் நேரில்சந்தித்தபோதே ஓரளவுக்கு பேசி முடித்து விட்டாலும் ஒரு சில தொகுதிகள் மட்டுமேஇழுபறியாக உள்ளது.
அத்தொகுதிகள் குறித்து காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன்பேசிய பிறகு முடிவு செய்யலாம் என திமுக கூறியுள்ளது.
இதனால் இன்று முதலில் காங்கிரஸ் பின்னர் மார்க்சிஸ்டுகளுடன் திமுக உடன்பாடுகண்டது. அடுத்ததாக பாமகவுடன் உடன்பாடு ஏற்படவுள்ளது.












Click it and Unblock the Notifications