கார்த்திக்குடன் குற்றாலத்தில் நடராஜன் சந்திப்பு
குற்றாலம்:
பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக்கை குற்றாலத்தில் வைத்துமுதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் சந்தித்து ரகசியபேச்சு நடத்தினார்.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராக கார்த்திக் பொறுப்பேற்ற பிறகுகட்சியின் மாநில மாநாடு நெல்லையில் நடந்தது. ஆனால் பெரும் வன்முறைக்குமத்தியில் மாநாடு பாதியிலேயே முடிவடைந்தது.மாநாட்டில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கார்த்திக் கேட்க,திரண்டிருந்த முக்குலத்தோரில் பெருவாரியானவர்கள் அம்மாவுடன் தான் கூட்டணிவைக்க வேண்டும் என்றனர்.
எனக்கும் அதே ஆசை தான்.. ஆனால் கட்சியின் நலனுக்காக தலைமை எடுக்கும்முடிவுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் என கார்த்திக் கூறியபோது கூட்டத்தில்சலசலப்பு எழுந்தது.
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் செய்த கலாட்டாவால் கார்த்திக்கும், கட்சித்தலைவர்களும் பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். பாதியிலேயேகூட்டத்தை விட்டு ஓடினர்.
இந் நிலையில் அதிமுகவுடன் கூட்டணிக்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகஇருப்பதால், தனித்து போட்டியிட பார்வர்ட் பிளாக் தயார் என்று கட்சியின் அகிலஇந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிமுகவுடன் கூட்டணிக்கு முயற்சியைத் தொடரலாம் என்று கார்த்திக்தொடர்ந்து கூறி வருகிறார்.
இந் நிலையில் கார்த்திக், பிஸ்வாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நெல்லையிலிருந்துகுற்றாலம் சென்றனர். அங்கு அவர்களுக்காக புக் செய்து வைக்கப்பட்டிருந்தஹோட்டலுக்குச் செல்லாமல், நடராஜனுக்கு சொந்தமான பங்களாவுக்குச் சென்றனர்.
அங்கு, பிஸ்வாஸ், கார்த்திக், மேற்கு வங்க அமைச்சர் நரேந்திர நாத் உள்ளிட்டமுக்கிய தலைவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்,
அவர்களுடன் நடராஜனுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். அதிமுக கூட்டணிகுறித்தும், சந்தானம் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் நிலை குறித்தும்ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்குப் பின்னர் கார்த்திக் உள்ளிட்டவர்கள் குற்றாலத்தியே தங்கினர். இன்றுமதுரை திரும்பி அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகின்றனர்.
இதற்கிடையே அதிமுக தலைமையுடன் நடராஜன் பேசிவிட்டு முடிவைச் சொல்வார்என்று தெரிகிறது. இதன் பின்னரே கூட்டணி குறித்து கட்சியின் இறுதி முடிவைகார்த்திக் அறிவிப்பார்.
நெல்லையில் தனக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்துவிட்டு அதிமுக தலைமை தன்னைகூட்டணியில் சேர்க்கும் என கார்த்திக் நம்புகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications