அதிமுக வேட்பாளர் பட்டியல்: சசிகலா பூஜை
சென்னை:
அதிமுக வேட்பாளர் பட்டியலை சென்னை கோவில்களில் வைத்து சிறப்பு பூஜைசெய்தார் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.
அதிமுகவில் நேர்காணலுக்கு முன்பே வேட்பாளர் பட்டியல் தயாராகி விட்டதாகத்தெரிகிறது. முறைப்படி அறிவிப்பதற்கு முன் பட்டியலை முக்கியக் கோவில்களில்வைத்து பூஜை செய்ய கேரள ஜோதிரடின் அறிவுரைப்படி முடிவெடுக்கப்பட்டது.இதன்படி இன்று அதிகாலை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சசிகலா சென்றார்.அங்கு வேட்பாளர் பட்டியலை, கபாலீஸ்வரர் சன்னதியில் வைத்து சிறப்பு அர்ச்சனை,பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் அந்தப் பட்டியலுடன், காலை 8 மணியளவில் திருவொற்றியூர்வடிவுடையம்மன் கோவிலுக்கு சசி சென்றார். அங்கும் வேட்பாளர் பட்டிலுக்கு பூஜைசெய்யப்பட்டது. பின்னர் கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் சசிகலாகலந்து கொண்டார்.
இன்று மாசி மகம் ஆகும். முதல்வர் ஜெயலலிதாவின் நட்சத்திரம் மகம் ஆகும்.எனவே இந்த நாளில் இரு முக்கிய கோவில்களிலும் அதிமுகவின் வேட்பாளர்பட்டியலுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலின்போதும் வடிவுடையம்மன் கோவிலில் வைத்து அதிமுக வேட்பாளர்பட்டியலுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளை பவுர்னமிதினமாகும். அனேகமாக நாளையே கூட அதிமுக வேட்பாளர் பட்டியல்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.