யுஏஇ: அதிகரிக்கும் இந்தியர்கள் தற்கொலைகள்
துபாய்:
-முதுவை ஹிதாயத் (எம்.என்.ஏ.)
ஐக்கிய அரபு நாடுகளில் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்துஅதிகரித்து வருகிறது.
இந்திய துணைத் தூதரகத்தின் புள்ளி விபரப்படி 2004ம் ஆண்டில் 70 இந்தியர்களும்,2005ம் ஆண்டில் 84 இந்தியர்களும், இந்த ஆண்டில் ஜனவரி, பிப்ரவரியில் மட்டும் 15பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்தத் தற்கொலைகளைத் தடுக்க தூதரகம் சில நடவடிக்கைளை எடுத்து வருவதாகவும்,கவுன்சிலிங் சென்டர் ஒன்றைத் துவக்கவுள்ளதாகவும் இந்தியத் தூதரகத்தின்தொழிலாளர் நல அதிகாரியான முபாரக் தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாத பிணங்கள்:
இதற்கிடையே துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள பிணவறைகளில் அடையாளம்தெரியாத இந்தியர்களின் பிணங்கள் ஏராளமாய் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியர் ஒருவர் காணாமல் போனதையடுத்து அவர் உயிரோடு இருக்கிறாரா அல்லதுமரணமடைந்துவிட்டாரா என்பதை அறிய பிணவறைகளில் அவரது நண்பர்கள்சோதனையிட்டபோது பல அடையாளம் தெரியாத இந்தியர்களின் பிணங்கள்இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்ட விரோதமாக தங்குவோர் விபத்திலோ,நோயிலோ பலியாகும்போது அவர்கள் குறித்த விவரங்கள் அரசிடம் இருப்பதில்லை.இதனால் அந்த உடல்கள் இந்த பிணவறைகளை வந்தடைந்துவிடுகின்றன.
இப்படிப்பட்டவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் சமூகப் பணியில்வேலி ஆப் லவ் (valley of love) என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications