மீனா வீட்டுக்குள் நுழைய முயன்ற ரசிகர்!
மீனாவின் வீடு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டெம்பிள் வியூ சாலையில் உள்ளது. இங்கு காலை 8மணியளவில் காவலாளி சீனி முகம்மது பணியில் இருந்தார். அப்போது மிகவும் அழுக்கான தோற்றத்துடன்கூடிய ஒரு நபர் அங்கு வந்தார்.
தான் மீனாவின் தீவிர ரசிகர் எனவும், அவரைப் பார்ப்பதற்காக வெளியூரிலிருந்து வந்திருப்பதாகவும்தெரிவித்தார். இதையடுத்து மீனா வீட்டில் இல்லை, எனவே போய் விட்டு பிறகு வாருங்கள் என்று காவலாளிவிரட்டியுள்ளார்.
ஆனால் அந்த நபர் போகாமல், மீனா வீட்டில்தான் இருக்கிறார், அவரைப் பார்க்காமல் போக மாட்டேன் என்றுபிடிவாதம் பிடித்துள்ளார். உண்மையில் அப்போது மீனா வீட்டில்தான் இருந்தார்.
இதனால் சீனி முகம்மதுவுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவலாளியை தள்ளிவிட்ட அந்த நபர் வீட்டுக்குள் நுழைய மயன்றார். ஆனால் காவலாளி அந்த நபரை இறுக்கமாகப் பிடித்துக்காண்டதால் இருவருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சத்தம் கேட்டு மீனாவின் தந்தையும், கார் டிரைவரும் ஓடி வந்தனர். 3 பேருமாக சேர்ந்து அந்த நபரைப் பிடிக்கமுயன்றனர். ஆனால் அதற்குள் அந்நபர் அவர்களிடமிருந்து தப்பி ஓடி விட்டார்.
காலையில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.