தஞ்சை-நாகையில் 12 போலி டாக்டர்கள் கைது
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ஒரே நாளில் நடந்த அதிரடி வேட்டையில்12 போலி டாக்டர்கள் பிடிபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அவ்வப்போது போலி டாக்டர்களை வேட்டையாடிப் பிடிப்பதுவழக்கம். இந் நிலையில் தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் ஒரே நாளில் நடந்தஅதிரடி சோதனையில் 12 போலி டாக்டர்கள் சிக்கியுள்ளனர்.சோதனையில் சிக்கிய தஞ்சை மருத்துவர்கள் விவரம்:
ரஹமதுல்லா (மேலநம்மகுறிச்சி), குணசேகரன் (மகாதவேன்பட்டினம்), அன்பழகன்(சொக்கன்விடுதி), ஹோமியோபதி படித்துவிட்டு எம்.பி.பி.எஸ் டாக்டராகசெயல்பட்ட சீனிவாசன் (பட்டுக்கோட்டை),
சித்த மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் எம்.பி.பி.எஸ். டாக்டர் என்றுபோர்டு போட்டுக் கொண்ட சங்கரன் (தஞ்சை), கார்த்திகேயன்,
முறையாக மருத்துவம் படிக்காத அக்பர் அலி;
10ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு பல் மருத்துவராகிவிட்ட கும்பகோணம் ஜார்ஜ்,8வது வகுப்பு படித்த பல் டாக்டர் தங்கராஜ்,
அகராத்தூர் ராஜேந்திரன், ஷேக் தாவூத், நாகப்பட்டனம் இடையாத்தி கிராமத்தைச்சேர்ந்த மருதமுத்து (படிப்பு பிளஸ்டூ) ஆகியோர்.
இவர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நடத்தி கிளினிக்குகளை சோதனை செய்த போலீஸார் அங்குவைக்கப்பட்டிருந்த ஏகப்பட்ட மருந்து பாட்டில்கள், ஊசிகள், சிரிஞ்சுகளையும்பறிமுதல் செய்தனர்.
இவர்கள் தங்கள் சர்வீசில் எத்தனை பேரை மேலே அனுப்பினார்களோ..பகவானுக்கே வெளிச்சம்.












Click it and Unblock the Notifications