பிசிஏ பட்டம் பெற்ற ராஜீவ் கொலையாளிகள்
வேலூர்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன்மற்றும் பேரறிவாளன் ஆகிய இருவரும் சிறையிலிருந்தபடியே பி.சி.ஏ.பட்டப்படிப்பை முடித்துள்ளனர்.
முருகனின் மனைவி நளினி எம்.சி.ஏ. பட்டப்படிப்பை நிறைவு செய்யவுள்ளார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன்,பேரறிவாளன் ஆகிய இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாககுறைக்கப்பட்ட முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த மூவரும் இந்திராகாந்தி திறந்த நிலை தேசியபல்கலைக்கழகத்தில் சேர்ந்து கம்ப்யூட்டர் அறிவியல் படிப்பை படித்து வந்தனர்.
முருகனும், பேரறிவாளனும் பி.சி.ஏ. படிப்பை முடித்து விட்டனர். அடுத்து எம்.சி.ஏபடிக்கவுள்ளனர்.
அதேபோல, நளினியும் எம்.சி.ஏ. படிப்பை நிறைவு செய்யும் நிலையில் உள்ளார்.சிறைக்குள் நடத்தப்படும் வகுப்புகளில் சேர்ந்து இவர்கள் இந்தப் பட்டப்படிப்பைமுடித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் 81 பெண் கைதிகள் பட்டப்படிப்பைமுடித்துள்ளனர். மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு படிப்புகளைமுடித்துள்ளனர், படித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.