For Daily Alerts
Just In
150 இடங்களில் புதிய தமிழகம் தனித்து போட்டி
மதுரை:
புதிய தமிழகம் கட்சியை ஜனநாயக ரீதியில் செயல்பட விடாமல் அதிக அரசுதடுக்கிறது. பொதுக்கூட்டங்கள் போடக் கூட விடாமல் தடுக்கிறார்கள் எனஅக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எங்களது கட்சியின்கொள்கைகளை ஏற்று, எங்களுடன் கூட்டணி வைக்க எந்தக் கட்சியும் முன்வரவில்லை. இதனால் பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் கூட்டணி தொடர்பாகவிவாதித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி புதிய தமிழகம் கட்சி 150 தொகுதிகளில்தனித்துப் போட்டியிடும். எங்களது 25 சதவீதம் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல்அப்படியே ஒருங்கிணைக்கும் வகையில் 150 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.
நெல்லையில் வரும் 24ம் தேதி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
ஜனநாயக ரீதியில் எங்களை செயல்பட விடாமல் அதிக அரசு தடுக்கிறது. இடையூறுசெய்து வருகிறது. தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்களைக் கூட நடத்தமுடியாமல் அதிமுக அரசு தடுத்து வருகிறது என்றார் கிருஷ்ணசாமி.
Comments
Story first published: Tuesday, March 21, 2006, 5:30 [IST]