கரூரில் நிலநடுக்கம்-மக்கள் பெரும் பீதி
கரூர்:
கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் திங்கள்கிழமை இரவு திடீரெனஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். விடிய விடியவீடுகளுக்குப் போகாமல் தெருக்களிலேயே இருந்தனர்.
இந்த பீதி அடங்குவதற்குள் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும்செவ்வாய்க்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தியது.
கேப்பம்பட்டி, பேத்தான்கோட்டை ஆகிய கிராமங்களில் இருமுறை லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் சில வீடுகளின் சுவர்களில் விரிசலும் ஏற்பட்டது.பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு ஓடினர்.
தகவல் அறிந்ததும் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவகிராமங்களுக்குச் சென்று பார்வையிட்டனர்.
நில அதிர்வு ஏற்பட்ட நேரத்தில் குண்டு வெடிப்பது போல பெரும் சப்தம்ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications