ஏடிஎம் சேவை வரி: ப.சிக்கு பாஜக கண்டனம்
கும்பகோணம்:
வங்கி ஏடிஎம் சேவை வரி தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார் என தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜாகுற்றம் சாட்டியுள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் ராஜா பேசுகையில்,வங்கி ஏ.டி.எம். சேவைக்கு வரி விதித்தது தொடர்பாக சிதம்பரம் முன்னுக்குப் பின்முரணாக பேசி வருகிறார். முதலில் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்என்றார்.
ஆனால் தெளிவாக கூறுமாறு கேட்டால், இது சேவையைத் தரும் நிறுவனங்களுக்குவிதிக்கப்படும் வரி, ஆனால் அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மீது அதைசுமத்தினால் அதற்கு அரசு பொறுப்பேற்காது என்று பொறுப்பற்ற முறையில்பேசுகிறார்.
எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல கோடி பணத்தைப் பெற்ற தேர்தல்ஆணையர் நவீன் சாவ்லா மீது தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கைஎடுக்கவில்லை. அது ஏன் என்பதை ஆணையம் விளக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டம்நடத்துகின்றன. இதன் மூலம் அரசுகளுக்கு எதிரான போக்கை அவைகடைப்பிடிக்கின்றன.
மறைமுகமாக எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக அவை நடக்கின்றன. எனவே இத்தகையபோராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அம்மாதிரியான போராட்டங்களைநடத்தும் அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications