தேர்தலில் நாட்டம் இல்லாத கைதிகள்!
கோவை:
கோவை மத்திய சிறையில் உள்ள பெரும்பாலான கைதிகள் சட்டசபைத் தேர்தல்குறித்து நாட்டம் இல்லாமல் உள்ளனர்.
தேர்தல்களில் ஓட்டுப் போடும் உரிமை பொதுவாக கைதிகளுக்குக் கிடையாது.இருப்பினும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விரும்பினால்வாக்களிக்கலாம். கோவை சிறையில் மொத்தம் 42 குண்டர் தடுப்புச் சட்ட கைதிகள்உள்ளனர்.இவர்களில் 15 பேர் மட்டுமே சட்டசபைத் தேர்தலில் ஓட்டுப் போட விருப்பம்தெரிவித்து சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். மற்றவர்கள் வாக்களிக்கவிருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டனராம்.
வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் கோவை, நீலகி, ஈரோடுமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் விருப்பம் குறித்து சம்பந்தப்பட்டமாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவர்களை எப்படி வாக்களிக்க வைப்பது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம்தான்இனி முடிவு செய்யும். பெரும்பாலும் தபால் மூலமே இவர்கள் வாக்களிப்பார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் கைதிகளில் பெரும்பாலானவர்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்று சிறைஅதிகாரிகளிடம் கேட்டபோது,
விருப்பம் இருக்கிறதா, இல்லையா என்று மட்டுமே நாங்கள் கைதிகளிடம் கேட்டோம்.அவர்களும் விருப்பம் உள்ளது, இல்லை என்று மட்டும் தெரிவித்துள்ளனர். மற்றவைகுறித்து நாங்கள் எதையும் கேட்கவில்லை என்று தெரிவித்தனர்.